சித்தர்களின் சோதிட,மருத்துவப் புலமையை அறிய சத்திர விதி விலக்கு சித்த மருத்துவத்தில் உள்ளது.இவ் விதிப்படி அமாவாசைக்குப் பின் வரும் குறிப்பிட்ட திதிகளில் குறிப்பிட்ட அவையங்களில் அறுவை சிகிட்சை விலக்கிட வேண்டும்.
1) பிரதமை-பெருவிரல்
2) துதியை-உள்ளங்கால்
3) திருதியை-முழங்கால்
4) சதுர்த்தி-பெருந்துடை
5) பஞ்சமி-குதம்
6) சஷ்டி-நாபி
7) சப்தமி-தனங்கள்
8) அஷ்டமி-கை,கால்
9) நவமி-கழுத்து
10) தசமி-உதடு
11) ஏகாதசி-நாக்கு
12) துவாதசி-நெற்றி
13) திரியோதசி-புருவம்
14) சதுர்த்தசி-பிடரி
15) பூரணம்-தலை உச்சி
இரணங்களுக்கு கூடாத திதிகளாகிய இந்நாட்களில் ஒவ்வொரு நாளிளும் அமுதம் உடலில் வெவ்வேறு இடங்களுக்கு நிலைதலால் உடலில் ரணப்பட்டால் ஊறு தரும்